சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் சந்திப்பு!
இலங்கை சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட ஆணையாளர்களுடனான விசேட சந்திப்பொன்று ஜூலை 03ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
நாட்டின் தற்போதைய சூழலில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், பாலினச் சமத்துவத்தை (Gender Equality) நிலைநாட்டுதல் மற்றும் சமூக, பொருளாதார ரீதியாகப் பெண்களை வலுவூட்டுதல் ஆகிய உன்னத நோக்கங்களுக்காக சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு முன்னெடுத்து வரும் காத்திரமான பணிகள் இச்சந்திப்பின் போது பெரிதும் பாராட்டப்பட்டன.
ஆணைக்குழு இதுவரை அடைந்துள்ள முற்போக்கான முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் அபிவிருத்திப் பாதையில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், மகளிர் ஆணைக்குழுவின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கும், அவர்களின் எதிர்கால நல்முயற்சிகளுக்கும் அரசாங்கம் எப்போதும் முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் இச்சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே