கரும்புலி மாவீரர்களான மில்லர், அங்கயற்கண்ணியின் தாயார்களுக்கு கௌரவிப்பு!

#SriLanka #Lanka4 #black #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கரும்புலி மாவீரர்களான மில்லர், அங்கயற்கண்ணியின் தாயார்களுக்கு கௌரவிப்பு!

கரும்புலி மாவீரர்களான கப்டன் மில்லர் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரை பெற்றெடுத்த பெற்றோர்கள் இன்றைய நாளில் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர் ஈழத் தமிழர் விடுதலைப் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கரும்புள்ளிகளாக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த கரும்புலி கப்டன் மில்லர் அவர்களது தாயார் மற்றும் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அவர்களது தாயார் ஆகியோர் கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினம் (05-07-2026) கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரால் பொன்னாடை போத்தி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நெல்லியடி பகுதியில் உள்ள இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் மற்றும் காங்கோசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்ற கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்திய முதற்கடற் கடற் கரும்புலி அங்கயற்கண்ணி ஆகியோரை ஈன்றெடுத்த பொற்றோர்களே இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4