சிறைக் கலவரம் - நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் என அழுத்தம்!

#SriLanka #Negombo #Resign #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Harshana Nanayakkara
Thamilini
2 hours ago
சிறைக் கலவரம் - நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் என அழுத்தம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பதவியை விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் நேற்று (06) வலியுறுresத்தியுள்ளார்.

 இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் சுமார் 600 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். ஆனால், அங்கு 2,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர். 

இந்த இடநெருக்கடிப் பிரச்சினை நீண்டகாலமாகவே நிலவி வருகின்றது. எனவே, தற்போதைய அரசாங்கத்திடம் முறையான முகாமைத்துவம் இல்லை என்பது இந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை புலனாகியுள்ளது.

 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உயிர்களுக்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பு கூற வேண்டும். முதன்முதலில் மோதல் சம்பவம் இடம்பெற்ற உடனேயே அரசாங்கம் துரிதமாகச் செயற்பட்டிருந்தால், இந்தளவிற்குப் பாரிய விபரீதமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்காது.

 ஆகவே, இந்தச் சம்பவத்திற்கு வெறுமனே வாய்த்த வார்த்தைகளால் பொறுப்பேற்பதை விடுத்து, நீதி அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.” இவ்வாறு முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4