இந்தோனேசியாவின் உயரிய விருதை பெற்ற இந்திய பிரதமர் மோடி

#India #government #Indonesia #Lanka4 #Award #NarendraModi #L4
Prasu
3 hours ago
இந்தோனேசியாவின் உயரிய விருதை பெற்ற இந்திய பிரதமர் மோடி

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பிற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா' பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த உயரிய விருதை இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

இந்நிலையில், இது குறித்து "இந்தோனேசியாவின் உயரிய விருது எனக்கும் மிகுந்த அன்புடன் வழங்கப்பட்டது. இந்த கௌரவம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உரியது. இது இந்தோனேசிய மக்களின் உணர்வுகளுக்கும், இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் நெருங்கிய உறவுகளுக்கும் உரியது," என்று பிரதமர் அலுவலகம் X தளத்தில் பதிவிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4