கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 71 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல்!
கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 71 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொற்றியுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் இந்திகா கருணாதிலகே தெரிவித்தார்.
மேலும் ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்தத.
கலைத்துறையைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையையும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக நிர்வாகம் பல்வேறு துறைகளின் விரிவுரைகளை ஒரு வாரத்திற்கு இணையவழி மற்றும் கலப்பு முறைகளில் நடத்த முடிவு செய்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பல்கலைக்கழகம் பல நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே