நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய சபாநாயகர்
இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையே நிலவும் கடும் முரண்பாடுகளைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் இவர்களது ஆசனங்கள் சபாநாயகரினால் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கௌரவ கஜேந்திரகுமார் எம்.பி: எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற நான்காவது தொகுதியில், முதல் வரிசையில் மூன்றாவது இடத்தில் அமர்ந்திருந்த கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் ஆசனம், அதே வரிசையில் முதலாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கௌரவ செல்வம் அடைக்கலநாதன் எம்.பி: கௌரவ கஜேந்திரகுமார் அவர்களுக்கு அடுத்ததாக, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கௌரவ காதர் மஸ்தான் எம்.பி: அதற்கு அடுத்த ஆசனத்தில் தொழில் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கௌரவ அர்ச்சுனா இராமநாதன் எம்.பி: இதுவரை காலம் கௌரவ கஜேந்திரகுமார் அவர்களுக்கு அடுத்ததாக அமைந்திருந்த கௌரவ அர்ச்சுனா இராமநாதன் அவர்களின் ஆசனம், எவ்வித மாற்றமுமின்றி அதே இடத்தில் பேணப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே