திறைசேரியில் இருந்து மாயமான 2.5 மில்லியன் டொலர் பணம் - நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!
#SriLanka
#Parliament
#Dollar
#Harsha de Silva
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
திறைசேரியில் இருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் சைபர் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா சபையில் தெரிவித்தார்.
தொடர்புடைய அறிக்கையை சமர்பித்தப்பின் கருத்து வெளியிட்ட அவர், இந்த மோசடிக்கு அரச நிறுவனங்களுக்குள் ஏதேனும் உள்வீட்டுத் தொடர்புகள் அல்லது கூட்டுச் சதித்திட்டங்கள் இருந்ததா என்பதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட சட்ட அமுலாக்கப் பிரிவினரே விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே