மத்தியக் கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் - எண்ணெய் விலைகள் கடுமையாக உயர வாய்ப்பு!
ஈரானிய இராணுவ மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் நடத்திய தொடர் பெரும் தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தம் "முடிந்துவிட்டது" என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தத் தொடர் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்களை ஈரான் தாக்கியதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இந்தப் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
ஈரானியக் கடற்கரையோரம், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைக் கிடங்குகள் மற்றும் கடற்படைத் தளங்கள் உட்பட 90-க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன.
இருப்பினும், இந்தத் தாக்குதல்கள் இராணுவ இலக்குகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புஷேர் அணுமின் நிலையப் பகுதி, பந்தர் அப்பாஸ் துறைமுக நகரம், அத்துடன் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை பெரும் வெடிப்புகளால் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் வளைக்குடா நாடுகள் மீது தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இதன் விளைவாக, முழு மத்திய கிழக்கு பிராந்தியமும் மீண்டும் ஒரு கடுமையான போர் நிலைக்குள் நுழைந்துள்ளது, மேலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக உயரும் அபாயமும் உள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே