கால்பந்து உலகக்கோப்பை தொடர்பில் நாம் அறியாத சுவாரஸ்யமான தகவல்
எந்த நாடு FIFA உலகக்கோப்பையை வென்றாலும், அசல் உலகக்கோப்பையை தங்கள் நாட்டிற்கு நிரந்தரமாக எடுத்துச் செல்ல முடியாது.
வெற்றி பெற்ற தருணத்தில் அந்த அசல் கோப்பையை கையில் ஏந்தி கொண்டாடுவார்கள். பின்னர் அதை FIFA-விடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.
அதன்பிறகு, அதே வடிவில் தயாரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட அதிகாரப்பூர்வ பிரதிக் கோப்பை மட்டுமே வெற்றி பெற்ற நாட்டிற்கு வழங்கப்படும்.
தற்போது பயன்படுத்தப்படும் FIFA உலகக்கோப்பை 1974 முதல் வழங்கப்பட்டு வருகிறது. பலர் நினைப்பது போல, இந்தக் கோப்பையை தொடர்ந்து மூன்று முறை வென்றால் சொந்தமாகிவிடும் என்பது உண்மையல்ல.
அந்த விதி 1970 வரை பயன்படுத்தப்பட்ட Jules Rimet Trophyக்கே பொருந்தியது. அந்தக் கோப்பையை 1970ல் மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்ற பிரேசில் நிரந்தரமாகப் பெற்றது.
ஆனால் 1974 முதல் வழங்கப்படும் தற்போதைய FIFA உலகக்கோப்பை எப்போதும் FIFAவின் சொத்தாகவே இருக்கும். எந்த நாடும் அதை நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாது.
ஆனால், உலகக்கோப்பைப் போட்டியில் சுவிற்சர்லாந்து வெல்லாவிட்டாலும், ஒரு சிறப்பான பெருமை அந்த நாட்டுக்கு எப்போதும் உண்டு.
உலகம் முழுவதும் சுற்றிவரும் அந்த அசல் உலகக்கோப்பை, ஒவ்வொரு தொடரும் முடிந்த பிறகும் மீண்டும் சுவிற்சர்லாந்திற்கே திரும்பி வருகிறது.
போட்டி முடிந்ததும் தாயகம் திரும்பும் தங்க கிண்ணத்தை வழமை போலவே வரவேற்க சுவிற்சர்லாந்து காத்திருக்கின்றது.
போட்டி முடிந்ததும், உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த அந்த தங்கக் கிண்ணம் மீண்டும் தனது தாயகமான சுவிற்சர்லாந்திற்குத் திரும்பும். வழமைபோல, அதை வரவேற்க சுவிற்சர்லாந்து காத்திருக்கிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே