நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #No-confidence motion #Harshana Nanayakkara #Opposition party
Thamilini
4 hours ago
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை!

நீதி அமைச்சர் ஹர்ஷனா நானயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித். பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் தமது அனைத்துப் பொறுப்புகளையும் புறக்கணித்துவிட்டார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதால், அவருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. 

 அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்   அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4