இஸ்ரேலில் பாராளுமன்றம் கலைந்தது - அவசரமாக சட்டமூலங்களை நிறைவேற்றிய நெதன்யாகு!
இஸ்ரேலின் பாராளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இறுதிக் கூட்டத்தில் சில சட்டமூலங்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 4 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் தற்போது கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு, நப்தலி பென்னெட் முதலானோர் போட்டியிடவுள்ளனர்.
அடுத்து வரக்கூடிய தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது சில சட்டமூலங்களை அவர் அவசர அவசரமாக நிறைவேற்றி வருவதாக கூறப்படுகறிது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே