ஜோர்டானில் அடையாளம் தெரியாத மனித எச்சங்கள் மீட்பு - பகுப்பாய்வு நடவடிக்கை தீவிரம்
ஈரானியத் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு ஈராக்கில் மேலும் ஒரு அமெரிக்கப் படை வீரர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஆளில்லா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை கட்டுப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இந்த உயிரிழப்பு நேர்ந்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்க வீரர்களைத் தவிர, காணாமல் போன மற்றொரு படை வீரரைத் தேடும் பணியின்போது அடையாளம் தெரியாத மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக CENTCOM அறிவித்துள்ளது.
அந்த மனித எச்சங்கள் தொடர்பான உறுதிப்படுத்தும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே