‘கரப்பான் பூச்சி’ எதிர்ப்புப் போராட்டங்களை தொடர்ந்து இந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகல்
தொடர்ச்சியான தேர்வுத்தாள் கசிவுகளுக்கு எதிராகப் போராடி வந்த இந்திய இளைஞர் இயக்கத்திற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பல வாரங்களாக நீடித்து வந்த தங்களது போராட்டத்தை “நம்பிக்கையின் அடிப்படையில்” முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்களுடன் போராட்டக்காரர்களின் தலைவர்கள் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, புது தில்லியில் போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய அதே வேளையில், பிரதான் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
"ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசவிரோத சக்திகள் இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாத வகையில் எனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்" என்று பிரதான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே