ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் - 50 பேர் காயம்!! பல இடங்களில் மின்துண்டிப்பு!
தெற்கு ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அன்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால், பரவலான சேதம் ஏற்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வணிக வளாகம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க குமாமோட்டோ கோட்டையின் சுவர்கள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் சுமார் 40,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் கைபேசி சேவைகள் தடைபட்டன.
அதிவேக ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன, குமாமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TSMC (ஒரு சிப் தயாரிப்பு நிறுவனம்), சோனி மற்றும் ஃபுஜிஃபிலிம் போன்ற முக்கிய நிறுவனங்களின் ஊழியர்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வரும் வாரத்தில் மேலும் நில அதிர்வுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே