உலகளாவிய அமைச்சர் உறுதி! வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பு தொடரும்,சீன வெளியுறவு
பொறுப்புள்ள ஒரு நாடாக தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி, உலகளாவிய வளர்ச்சியின் ஊக்குவிப்பாளராகவும் பங்குதாரராகவும் செயல்படுவோம் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சீனாவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்னெடுப்பின் மூலம், உலகளாவிய வளர்ச்சிப் பணிகளை வலுப்படுத்துவதற்கு சீனா கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு வழிமுறைகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு, நடைமுறைப் பூர்வமான முடிவுகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலையற்ற மற்றும் சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், இந்த முன்னெடுப்பின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளதாக வாங் யி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தரப்பினரும், கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பின் மூலம் எட்டப்பட்ட முடிவுகளை உயர்வாகப் பாராட்டியுள்ளனர்.
மேலும், சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் சீனா வகிக்கும் தலைமைத்துவப் பங்கிற்கு அவர்கள் தமது பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சீனாவுடனான வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே