ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்க இராணுவத்தின் 'வான்வழிப் பாதுகாப்புடன்' மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற இரண்டு எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
"விதிமுறைகளை மீறிய எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டு நிறுத்தப்பட்டன, அதே நேரத்தில் மற்ற நான்கு எண்ணெய்க் கப்பல்கள் உடனடியாகத் தங்கள் பாதையை மாற்றி முந்தைய இடங்களுக்குத் திரும்பின" என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளார்.
தெஹ்ரான் தனது சொந்தக் கடற்கரைகளுக்கு அருகில் அமைத்த நீர்வழிக்கு மாற்றாக, அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கப்பட்ட 'அறிவிக்கப்படாத பாதை' வழியாக அந்த எண்ணெய்க் கப்பல்கள் ஜலசந்தியைக் கடக்க முயன்றதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, ஹோர்முஸ் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தின் மீது ஈரான் திறம்படக் கட்டுப்பாட்டைப் பராமரித்து வருகிறது.
அதன்படி, கப்பல்கள் அந்த நீர்வழியைப் பயன்படுத்துவதற்கு முன்பு அனுமதி பெற்று, பயணக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே