பிரித்தானியாவில் வாகன விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் மரணம் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டு
ஒரு கார் மின்விளக்குக் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்த நான்கு பேரின் மரணம் தொடர்பாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
23 வயதான ஜாக் டிகில், 26 வயதான கிரேக் ஷாக்லெட்டன்-பிராடி, 24 வயதான ஆண்ட்ரூ ராபர்ட்ஸ் மற்றும் 23 வயதான பெஞ்சமின் டூலி ஆகியோர், ஜூலை 24 அன்று மெர்சிசைடில் உள்ள ஹூய்டன் என்ற இடத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிழக்கு பிரெஸ்காட் சாலையில் ஒரு கருப்பு நிற சீட் குப்ரா கார் மின்விளக்குக் கம்பத்தில் மோதியதாக வந்த தகவலையடுத்து காவல்துறை வரவழைக்கப்பட்டது.
அப்போது, காரில் பயணித்த 27 வயதான நபர் ஒருவர் உயிர் தப்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட ஒரு புதிய தகவலில், 27 வயதான ஜேம்ஸ் டிகில் மீது, அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துவதற்கு உடந்தையாக இருந்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே