தந்தையின் இறுதிக்கிரியை: காணொளி அழைப்பு மூலம் அஞ்சலி!
#India
#Death
#Social Media
#ImportantNews
#Father
#L4
Riya
1 hour ago
மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி தொழிலதிபர் ஒருவர், ஹரியானா மாநிலம் சோனிபட்டிலுள்ள முதியோர் இல்லத்தில் காலமானார். ஆசிரியர்களாகப் பணியாற்றும் இவரது மூன்று மகள்களும் தூரத்தைக் காரணம் காட்டி, அவரது இறுதிக்கிரியையில் வர மறுத்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தந்தையின் அஸ்தியைப் பெறவும் மறுத்த மகள்கள், இறுதிக்கிரியைக்காக ரூ.5,100 பணத்தை ஒன்லைனில் அனுப்பிவிட்டு, இறுதிக்கிரியையை காணொளி அழைப்பு (Video Call) மூலமாகப் பார்த்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவியதையடுத்து, மகள்களின் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே