சுன்னாகத்தில் உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு சத்தமாகப் பாடல்கள் இசைக்க தடை விதிப்பு
#SriLanka
#Jaffna
#Police
#Student
#exam
#Lanka4
#Banned
#sound
#L4
Prasu
2 hours ago
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு (A/L Exams) தோற்றும் மாணவர்களின் கல்வி நலன் கருதி, பரீட்சை நிறைவடையும் வரை மதத்தலங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி சத்தமாகப் பாடல்கள் இசைப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிவானந்தன் நிதர்சன் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலம் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே