அமெரிக்காவில் தாய் மற்றும் சகோதரனை கொலை செய்த இந்திய வம்சாவளி இளைஞர்
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள புறநகர்ப் பகுதியில் வசிக்கும் தனது தாய் மற்றும் தம்பியைக் கொலை செய்ததாக இந்திய வம்சாவளி இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆக்டன் நகரைச் சேர்ந்த 17 வயதான அர்ஜுன் அரவிந்த், இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது 45 வயதான தாய் சுதா வெங்கடேசன் மற்றும் 14 வயதான தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், அவர் மீது இரண்டு கொலைக் குற்றங்கள், வீட்டு அல்லது குடும்ப உறுப்பினர் மீது இரண்டு தாக்குதல் மற்றும் காயப்படுத்திய குற்றங்கள், இரண்டு தாக்குதல் மற்றும் காயப்படுத்திய குற்றங்கள், அனுமதியின்றி வாகனம் பயன்படுத்துதல் மற்றும் மோட்டார் வாகனத் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே