சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும்!
“பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்க வேண்டும், அவர்களைப் பாதுகாத்து அன்புடன் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தாலும், பிள்ளைகளின் தேவைகளைப் பொருட்படுத்தாமல் செயற்படும் சம்பவங்கள் இன்றும் இடம்பெறுகின்றன.
எனவே, சிறு பிள்ளைகளை எவ்வாறு நடத்துகிறோம் என்பதை நாம் ஆழமாக ஆராய வேண்டும்.
அவர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளுக்கான காரணிகளைக் கண்டறிந்து, அவற்றை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சிறுவரினதும் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.
” இசுருபாய கல்வி அமைச்சில் நடைபெற்ற தேசிய ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான கலைத்திட்டக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட ஆசிரியர் வழிகாட்டி மற்றும் செயற்பாட்டு வழிகாட்டித் தொகுப்பை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே