ஊழல் குற்றச்சாட்டில் ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவரை பணிநீக்கம் செய்த ஜெலென்ஸ்கி
பணமோசடி வழக்கில் ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் சந்தேக நபர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டதை அடுத்து, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது மிக மூத்த அதிகாரிகளில் ஒருவரைப் பணிநீக்கம் செய்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ரஷ்யாவின் படையெடுப்பையும் மீறி, சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் தேசியத் தேர்தல்களைக் கோரிய ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளன.
இந்த ஊழல் விசாரணையில் ஜெலென்ஸ்கி நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றாலும் இது அவரை மற்றொரு அரசியல் நெருக்கடிக்குள் இழுத்துச் செல்வதாகவும் அவரது மனவுறுதிக்கு மற்றொரு சோதனையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு பெரிய ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்குப் பிணைத்தொகை செலுத்துவதற்காக 150 மில்லியன் ஹிரிவ்னியாக்களை (3.4 மில்லியன் டாலர்) பணமோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு குழுவினரை இந்த விசாரணை அடையாளம் கண்டுள்ளதாக தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஜெலென்ஸ்கி இந்த விசாரணை குறித்து பகிரங்கமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஐரினா முத்ராவை நீக்கி ஒரு ஆணையைப் பிறப்பித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே