புகழ்பெற்ற இலங்கைப் பாடகி நந்த மாலினி காலமானார் - மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு
மூத்த இலங்கைப் பாடகி நந்தா மாலினி தனது 82வது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
1943ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி அலுத்கம, லெவண்டுவவில் பிறந்த நந்தா மாலினி, இளம் வயதிலிருந்தே தனது பாடும் திறமையை வெளிப்படுத்தினார்.
அவர் பாராட்டையும் புகழையும் பெற்று, சிறந்த பாடகிக்கான பதினொரு சரசவியா விருதுகளையும் எட்டு ஜனாதிபதி விருதுகளையும் வென்றுள்ளார்.
இந்நிலையில், நந்த மாலினியின் மறைவை முன்னிட்டு, நாளை முதல் மூன்று நாட்களுக்கு தேசிய அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய நாட்கள் இலங்கையில் தேசிய அனுசரிப்பு நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மூத்த பாடகி விஷாரத் டாக்டர் நந்த மாலினியின் திருவுடல், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, நாளை (21) காலை 10.00 மணி முதல் சனிக்கிழமை (22) பிற்பகல் 3.30 மணி வரை நுவகொட, நாவல வீதி, விஜயபா மாவத்த, எண் 30-இல் அமைந்துள்ள நந்த மாலினி சங்கீத ஆசிரமத்தில் (இசை அகாதமி) அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை (22) மாலை 5.00 மணிக்கு பொரெல்லாவில் உள்ள பொது மயானத்தில் நடைபெறும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே