இலங்கை கடற்படை தளபதி – இந்திய பாதுகாப்புச் செயலர் சந்திப்பு!

#SriLanka #Meeting #LANKA4 #Defense #Indian #Navy #Commander #Secretary #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
இலங்கை கடற்படை தளபதி – இந்திய பாதுகாப்புச் செயலர் சந்திப்பு!

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்திய பாதுகாப்புச் செயலர் ராஜேஷ் குமார் சிங்கை புதுடெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த உயர்மட்ட சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாடும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களும் சந்திப்பின்போது மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை கடற்படை தளபதி, அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4