போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் விசாரணை
#SriLanka
#Investigation
#drugs
#LANKA4
#Father
#smugglers
#L4
Prasu
11 hours ago
டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை ஷிரான் பாசிக் கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே