கனடாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு

#SriLanka #CANADA #Dollar #Disabled persons #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
கனடாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு

கனடா மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி வரிச் சலுகை பெறும்போது ஏற்படும் மருத்துவச் சான்றிதழ் கட்டணங்களை ஈடுசெய்யும் வகையில், 150 கனடிய டொலர் ஒருமுறை நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 வரும் செப்டம்பர் 17 முதல் இந்த நிதியுதவித் தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய அரச அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு மற்றும் குடும்பங்கள் நலத்துறை அமைச்சர் பட்டி ஹஜ்டு,  அனைவருக்கும் தேவையான உதவிகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யவும், எவரும் கைவிடப்படாத ஒரு கனடாவை உருவாக்கவும் தடைகளை நீக்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

 இந்த 150 டொலர் நிதியுதவியைப் பெறப் பயனாளிகள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதி நிலைக்கு ஏற்ப நேரடியாகவே வழங்கப்படும்.

 ஜூலை 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலக்கட்டத்தில் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் வரும் செப்டம்பர் 17 அன்று இத்தொகையைப் பெறுவார்கள்.

 ஜூலை 2027-க்குப் பிறகு தகுதிபெறுபவர்கள் மற்றும் புதிய சான்றிதழ் ஒப்புதல் பெற்றவர்களுக்கு 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்தொகை வழங்கப்படும்.

 இத்திட்டத்தின் கீழ் முழுத் தொகையையும் ஒரே தவணையில் பெற்றவர்கள், கடந்த காலத்தில் பயனடைந்தவர்கள் மற்றும் தற்போது இத்திட்டத்திற்குத் தகுதி பெறாத நிலைக்கு மாறியவர்களுக்கும் கூட இந்த 150 கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4