22 ஆவது திருத்தத்திற்கு எதிராக போராட்டம் - எதிர்கட்சி தலைவர் அழைப்பு
அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கொழும்பில் செப்டம்பர் 24-ஆம் திகதி மிகப்பெரிய மக்கள் திரள் மற்றும் அமைதியான போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் கட்சியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைச் சிதைப்பதன் மூலம், முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஒரு கட்சி ஆட்சியை நிறுவ ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சிதைக்க அனுமதிக்கப்படாது என்று பிரேமதாச கூறினார்.
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்த்த முதல் அரசியல் சக்தி 'ஐக்கிய மக்கள் சக்திதான் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து முற்போக்கு சக்திகளிடமும் பொதுமக்களிடமும் அவர் அழைப்பு விடுத்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே