இனவாதம் மதவாதம் பேசாதவர் மங்கள - ஜே.வி.பி இரங்கல் தெரிவிப்பு

#Mangala Samaraweera
Nila
4 years ago
இனவாதம் மதவாதம் பேசாதவர் மங்கள - ஜே.வி.பி இரங்கல் தெரிவிப்பு

கொவிட் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உபயோகித்து கிடையாது. 

அரசியலில் சுதந்திர சிந்தனையைக் கொண்ட அவரால் , அரசியல் நெருக்கடிகளிலும்கூட தனது கொள்கைகளை கடைபிடிக்க முடிந்தது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜே.வி.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் இடம்பெற்ற சில தீர்க்கமான அரசியல் நிகழ்வுகளின் போது அவர் எம்முடன் நேரடியாக செயற்பட்டமை தொடர்பில் நினைவுகூர்கின்றோம்.

அவரது இழப்பால் துயரடைந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட சகலருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4