ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

#Court Order #Colombo
Prathees
4 years ago
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 25 சந்தேகநபர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை  ஒக்டோபர் 04 ஆம் திகதி எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதிபதிகள் தமித் தோட்டவத்தஇ அமல் ரணராஜா மற்றும் நவரட்ன மாரசிங்க அடங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அழைப்பாணை அனுப்பவும் மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் ஒரே நாளில் அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

சந்தேகநபர்கள் 25 பேர் மீது ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்தல் மற்றும் உதவி செய்தல் உட்பட 23இ270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4