சுவிற்சலாந்தில் இளைஞர்களுக்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்ள விழிப்புணர்வு!
சுவிற்சலாந்தில் கடந்த 24 மணிநேர முடிவில் 13ம்திகதி செப்டம்பர் 3 பேர் கொவிட் தொற்று காரணமாக மரணித்துள்ளனர்.
சுவிஸ் ஒட்டுமொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 53 வீதமானோர் தற்போது முழு தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் 7 வீதமானவர் ஒரு தடுப்பூசி டோஸ் மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளனர் கொவிட் சான்றிதழ் உள்ளவர்களுக்கு பொது இடங்களுக்கு அரசாங்கம் அணுகுவதை தடை செய்தததால், தடுப்பூசிகளின் விகிதம் அதிகரித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணி முதலில் வயதானவர்களுக்கும் மிகவும் தேவையுடையோருக்குமே வழங்கப்பட்டு, தற்போது 12-29 வயதுடையவர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது,
பெடரல் பொது சுகாதார அலுவலகத்தை சேர்ந்த வேர்ஜினி மஸ்சேரி கூறுகையில் செவ்வாயன்று 12-19 வயதுக்குட்பட்டவர்களில் 27 வீதம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும். 20-29 வயதுக்குட்பட்டவர்களில் 46 வீதமானவரக்ள் இரட்டை தடுப்பூசி பெற்றுக்கொண்டார்கள் என்றும் கூறினார்.
மேலும் இளைஞர்களிடையே தடுப்பூசி பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த சுவிஸ் அதிகாரிகள் பல டிக் டாக் மற்றும் யுடியுப் வீடியோக்களை சமூக வளைத்தளங்களில் சென்றடைய செய்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே