இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை !

#SriLanka #Covid Vaccine
Yuga
4 years ago
இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை !

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை இல்லாதவர்களை பஸ்களில் ஏற்றுவதை நிறுத்துவதற்கு அடுத்த மாதம் முதல் மேல் மாகாணத்தில் புதிய சட்டம் அமுல் படுத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.

சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மாகாண பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையைத் தாம் கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் பயணிகள் பஸ்களில் ஏறும் போது தடுப்பூசி செலுத்திய அட்டையைச் சரிபார்ப்பதற்கு நடத் துனருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4