300 மில்லியன் ரூபாயுடன் நாட்டைவிட்டு வெளியேறிய கணக்காளரும் அவரது மனைவியும்: நீதிமன்றம் பிடிவிறாந்து

#Court Order #Colombo
Prathees
4 years ago
300 மில்லியன் ரூபாயுடன் நாட்டைவிட்டு வெளியேறிய கணக்காளரும் அவரது மனைவியும்: நீதிமன்றம் பிடிவிறாந்து

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வீடு கட்டுதல் மற்றும் பொது வசதிகளைப் பெற்றுக்கொடுக்க உள்ளூர் தன்னார்வ அமைப்புக்கு வெளிநாட்டில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட   300 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தவர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மோசடியைச் செய்த கணக்காளர் மற்றும் அவரது மனைவியை கைது செய்யுமாறு  கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய நேற்று பிடிவிறாந்து உத்தரவுகளை பிறப்பித்தார்.

தன்னார்வ அமைப்பான ஞானம் அறக்கட்டளையின் கணக்காளராகப் பணியாற்றிய பங்காலசிங்கம் ராஜசங்கர் மற்றும் அவரது மனைவி உமா ராஜசங்கர்  ஆகியோர் இப்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதால்  அவர்களை கைது செய்ய இன்டர்போல் மூலம் சிவப்பு நோட்டீஸ் பெற வேண்டும் என்று சிஐடியின் தலைமை ஆய்வாளர் கே. சேனாதீரா அளித்த ஆதாரங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் அவர்களைக் கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4