ஜெர்மன் அதிபர் அஞ்சலோ மெர்க்கலை கடித்த கிளி- கலாய்க்கும் இணையவாசிகள்

Prasu
4 years ago
ஜெர்மன் அதிபர் அஞ்சலோ மெர்க்கலை கடித்த கிளி- கலாய்க்கும் இணையவாசிகள்

தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்க்கல்லை ஆஸ்திரேலிய வகையைச் சேர்ந்த கிளியொன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அது குறித்த மீம்களும் வைரலாகி வருகின்றன.

ஜெர்மனியில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியின் அதிபராக பதவி வகித்த ஏஞ்செலா மெர்க்கல் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். இருப்பினும் தனது CDU கட்சிக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் ஒருபகுதியாக மெர்லோவ் பகுதியில் உள்ள பறவைகள் பூங்காவிற்கு எதிர்பாராத விதமாக வருகை தந்த ஏஞ்செலா மெர்க்கல் அங்குள்ள பறவைகளை கையிலேந்தி விளையாடினார். கேமராக்களுக்கு போஸ்கொடுத்த நிலையில் இருந்த அவரை எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலியன் வானவில் லாரிகீட் வகையைச் சேர்ந்த கிளி அவர் கைகளைக் கடித்தது.

அவர் பயந்து அலறும் தருணத்தில் புகைப்படம் எடுத்து புகைப்படக்காரர் அதனை ட்விட்டரில் பதிவிட்டார்.அதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை மீம் கண்டெண்ட்டாக மாற்றி பல்வேறு பதிவுகளை வரிசையாக போடத்தொடங்கினர். மீம் கிரியேட்டர்கள் பல்வேறு மீம்களை பதிவிட்டனர்.

பிரதமர் மோடி, ஏஞ்செலா மெர்க்கல் போலவே பறவைகளுடன் விளையாடும் படத்தை பதிவிட்டு யார் போஸ் சிறப்பாக இருப்பதாக நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்,

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4