டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் சூழலில், இன்று (02) முதல் மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

"தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பங்கெடுக்கவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

 இதேவேளை இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 55,406 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அங்கு இதுவரை 21,565 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றாடலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4