மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் வாவிக்குள் விழுந்து பரிதாப மரணம்
#SriLanka
#Death
Yuga
3 years ago
குருநாகல் மாவட்டம், பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்துருவெவ பகுதியில், வாவிக்குள் விழுந்து நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியினூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே குறித்த வாவியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கந்துருவெவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.