அமைச்சர் பந்துலவிடம் 4 மணிநேரம் வாக்குமூலம் பெற்ற சிஐடியினர்
#Bandula Gunawardana
#Investigation
Prathees
3 years ago
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வர்த்தக அமைச்சர் விசாரணைக்காக. அழைக்கப்பட்டார்.
இரண்டு கொள்கலன் அடங்கிய வெள்ளைப்பூடு மற்றொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசியல் ரீதியாக தடைகள் இருப்பதாவும் தம்மை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, சிஐடியின் அதிகாரிகள் குழு விசாரணை தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இருந்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வாக்குமூலம் பெற்றுள்ளது.