தனது நாக்கினை இரண்டாக பிளந்த யாழ் இளைஞன். பொலிஸார் தீவிர விசாரணை
#Jaffna
#Police
#Investigation
Prathees
4 years ago
தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை இளைஞன் ஒருவர் சமூக வலைத்தளங்களில் இன்று நேற்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே தனது நாக்கினை இரண்டாக பிளந்த புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பச்சை குத்துவதில் பிரபலமான பிறேம் (ஜோய்) என்ற இளைஞனே இவ்வாறு தனது நாக்கினை இரண்டாக வெட்டுவதற்கு காலிக்குச் சென்று சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே