IPL Match41- டெல்லி அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா அணி 03 விக்கெட்களால் வெற்றி

Prasu
4 years ago
IPL Match41- டெல்லி  அணிக்கெதிரான  போட்டியில் கொல்கத்தா   அணி 03 விக்கெட்களால்  வெற்றி

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனின் 41வது ஆட்டம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் இன்று நடந்தது.

போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா அணி, டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ஓப்பனர்களான ஸ்மித் மற்றும் தவான் முறையே 39 மற்றும் 24 ரன்கள் அடித்தனர்

அதன் பிறகு வந்த கேப்டன் ரிஷப் பண்ட் மட்டுமே 39 ரன்கள் குவித்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கு ரன்னில் அவுட்டாகினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவில் தொடக்க வீரர்களில் ஒருவரான வெங்கடேஷ், 14 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இன்னொரு தொடக்க வீரர் சுப்மன் கில், 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த நிதிஷ் ராணா, அதிரடி ஆட்டத்தை கடைபிடிதார். அவர் 22 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார்.

ஒரு கட்டத்தில் இயான் மார்கன், தினேஷ் கார்த்திக் விக்கெட்டுகளை கைப்பற்றி டெல்லி, கொல்கத்தாவுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் அடுத்து வந்த சுனில் நரைன், 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் 10 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

முடிவில் 19வது ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தது கொல்கத்தா அணி. அந்த அணிக்காக நிதிஷ் ராணா, அதிகபட்சமாக 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4