குழந்தைகளை ஈடுபடுத்தி போதைப்பொருள் கடத்தல்!
#Arrest
Prasu
3 years ago
வேவல்தெணிய பிரதேசத்தில் மூன்று வயது ஆண் குழந்தையை ஈடுபடுத்தி போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்துவந்த குழுவை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் நடவடிக்கைக்கு குழந்தையின் தாயும் உதவியளித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தியதன் பின்னர், சிறுவனின் உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிராம் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.