பிரான்சில் மே மாத வெப்ப அலை காரணமாக 300 மரணங்கள் பதிவு
17 மாகாணங்களில் ஆரஞ்சு எச்சரிக்கைகளைத் தூண்டிய மே மாத வெப்ப அலை காரணமாக, பிரான்சில் 300 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைக்கப்படாத அனைத்துக் காரணங்களாலும் ஏற்படும் இறப்புத் தரவுகளின் அடிப்படையில் இந்த இறப்பு எண்ணிக்கை ஒரு பூர்வாங்க மதிப்பீடு என்றும், இதில் பெரும்பாலும் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களே அடங்குவர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மே 24-28 திகதிகளில் வடமேற்கு பிரான்சின் ஆறு மாகாணங்களில் 95 மரணங்கள் பதிவாகியுள்ளது.
மே 26 மற்றும் மே 30க்கு இடையில் மேற்கு மற்றும் மத்திய பிரான்ஸில் 300 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளது, இது எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட சுமார் 14 சதவீதம் அதிகமாகும்.
இந்தக் கூடுதல் இறப்புகளில் சுமார் 230 பேர் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆவர்.
பிரெஞ்சு வானிலை ஆய்வு நிறுவனமான மெட்டியோ-பிரான்ஸ், மே 26ம் திகதி அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான நாளாகப் பதிவானதாகவும் அன்றைய தேசிய சராசரி வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே