மேல் மாகாணத்தில் விசேட நடவடிக்கை: பல சந்தேக நபர்கள் கைது
#Arrest
#Police
Prathees
3 years ago
மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது பல்வேறு குற்றங்களுக்காக 1,156 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிடிவிறாந்து விறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த 531 பேரும் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 54 சந்தேக நபர்களும் துஸ்பிரயோக குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 491 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.