இலங்கை மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
#SriLanka
Yuga
3 years ago
நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று மூடுமாறு இலங்கை கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினைத்தை முன்னிட்டே கலால் திணைக்களம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
அக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மதுக்கடைகளின் மொத்த எண்ணிக்கை 4,092 என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது