பல கொள்ளைச் சம்ப்வங்களுடன் தொடர்புடைய நபர் கைது
மிரிஹான மற்றும் தலங்கம பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களை திருடிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் படிஇ நுகேகொட பிரதேச குற்றப்பிரிவு மிரிஹான சிகெரா சாலையில் நேற்று நடத்திய சோதனையின் போது 05 கிராம் மற்றும் 4701 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
தலவத்துகொடையில் வசிக்கும் 37 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
.சந்தேகநபர் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தலங்கம காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நபர் மிரிஹான மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவுகளில் பல கொள்ளை சம்பவங்களுக்கு தேடப்பட்டு வந்த நபர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் 02வளையல்கள்இ இரண்டு தங்கச்சங்கிலிகள் மற்றும் 03 ஜோடி காதணிகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் மிரிஹான பொலிஸில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.