பலாங்கொடையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு
#weather
Prathees
3 years ago
பலாங்கொட- சமனலவத்த வீதியின் மஸ்ஸென்ன பிரதேசத்தில் மண்;சரிவு ஏற்பட்டதால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் அந்த வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பஸ் சேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு கீழே சுமார் 15 வீடுகள் காணப்படுவதாகவும் மேலும்மண்சரிவு ஏற்பட்டால் அந்த வீடுகள் கடுமையாக சேதமடையக்கூடும் என்று குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர். ர்.