நண்பனின் உடலில் பெற்றோல் ஊற்றி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

#Court Order
Prathees
2 years ago
நண்பனின் உடலில் பெற்றோல் ஊற்றி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

கடவத்தை கிரிமெட்டியாகார  பகுதியில் உள்ள பேக்கரிக்குள் தனது நண்பனின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சந்தேக நபருக்கு கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க நேற்று (07) மரண தண்டனை வழங்கினார்.

அகுரஸ்ஸ கோடஹேன பகுதியைச் சேர்ந்த  21 வயதான தர்மகீர்த்தி அபயவிக்ரம என்ற நபரை  கொலை செய்த குற்றச்சாட்டில் இந்துருவ அட்டவல வத்தையில் வசிக்கும் ரஞ்சித் ஜயரத்ன (54) என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2003ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் தர்மகீர்த்தி அபயவிக்ரமவின் உடலில் தீக்காயத்துடன் நாற்பத்தெட்டு நாட்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததாக உயர் நீதிமன்றத்தில் தெரியவந்தது.

சந்தேக நபரும் உயிரிழந்த நபரும் கடவத்தை கிரிமெட்டியாகார  பகுதியில் உள்ள பாண் தயாரிக்கும் பேக்கரியில் வேலை செய்துள்ளனர்.

ஜூலை 23, 2003 பிற்பகலில் சந்தேக நபருக்கும்  இறந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் பேக்கரி உரிமையாளரால் தகராறு தீர்க்கப்பட்டதாக  உயர் நீதிமன்றம் கூறியது. தகராறு இடம்பெற்ற இரவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!