நிருபமாவும் நானும் நாட்டை விட்டு வெளியேறவில்லை: நடேசன்
நானும் என் மனைவியும் ஏன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என திருக்குமார் நடேசன் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ச ஆகியோர் பண்டோரா பேப்பர்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியான தகவல்களைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் வேறு எந்த நாட்டிற்கும் ஓடவில்லை, நாங்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு சுயாதீன விசாரணையை நான் கோரியுள்ளேன். அதனால் நானும் என் மனைவியும் ஏன் வெளியேற வேண்டும்? இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என நடேசன் கூறினார்.
பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (08) முற்பகல் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.