இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்ய பயணிகள்...

#SriLanka #Tourist
Yuga
2 years ago
இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்ய  பயணிகள்...

சுமார் 1,000 ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை வருவதற்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்த மாதம் இலங்கை வருவார்கள் என்று சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ,இம்மாதம் மாஸ்கோவிலிருந்து கொழும்பு செல்லும் அனைத்து இலங்கை விமானங்களையும் ரஷ்ய சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி ரஷ்யா மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது.

அதற்கமைய , ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது ஒவ்வொரு வாரமும் ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமானத்தை இயக்குகிறது.

மேலும் ,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யுஎல் 534 விமானம், மாஸ்கோவிலிருந்து அக்டோபர் 9, அக்டோபர் 16, அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 30 ஆகிய திகதிகளில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!