இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு வரும்படி நடேசனுக்கு மீண்டும் அழைப்பு!
Reha
2 years ago
முன்னாள் பிரதி அமைச்சரும் ராஜபக்ஸவினரின் நெருங்கிய உறவினருமான நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான திருக்குமார் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடாக சொத்துக்களை இரகசியமாக கொள்வனவு செய்தமை குறித்து மேலதிக வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், திருக்குமரன் நடேசன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.