யாழில் இ.போ.ச. பஸ்ஸை வழிமறித்து தாக்குதல்

#Jaffna #Police
Prathees
2 years ago
யாழில் இ.போ.ச. பஸ்ஸை வழிமறித்து தாக்குதல்

யாழ். தென்மராட்சிஇசாவகச்சேரி தபால் கந்தோர் வீதி ஊடாகப் பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்றை நேற்று பிற்பகல் வழிமறித்த இருவர் சாரதி, நடத்துநர் மற்றும் பயணி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

சாவகச்சேரி- சுன்னாகம் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட பஸ்ஸில் கெருடாவில் பகுதியில் ஏறிய நபரை குறி வைத்து இருவர் பஸ்ஸை மறித்து குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதனைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த சாரதி மற்றும் பொலிஸாருக்குத் தகவல் வழங்க முற்பட்ட நடத்துனர் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தபடபட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த பயணி வட்டுக்கோட்டை ஆதார  வைத்தியசாலையில் அமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்செரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!