கோவிட் கட்டுப்பாடு வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளது: கெஹெலிய
#Covid 19
#Corona Virus
Prathees
2 years ago
கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த்துவதில் வெற்றிகரமான கட்டத்திற்குள் இலங்கை வந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறந்த ஆதரவு கிடைத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இலங்கையில் யுனிசெப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் உடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.
உலகளாவிய கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு சில வளர்ந்த நாடுகள் வயதான குடிமக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் பின்னணியில், இந்த நாட்டின் வயதான குடிமக்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.